Karuvi -Jaffna

karuvi.org

கருவியின் ஆண்டு விழா-2018

கருவியின் ஆண்டு விழா-2018


கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர். வைத்திய கலாநிதி திரு.த.சத்தியமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய், பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களும், யாழ்ப்பாணம், மாநகரசபை, ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்களின் சார்பாக மாநகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திரு.ளு.ஜெயானந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக நல்லூர், பிரதேச செயலக, சமூகசேவை உத்தியோகத்தர், திரு.த.கனகராசா அவர்களும், யூனியன் அசூரன்ஸ், வடமராட்சி பிராந்தியமுகாமையாளர் திரு.து.கோபிநாத்; அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் கருவி பட்டிமன்றக் குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் கவிதை என்பன இடம் பெற்றன. மேலும் இந்நிகழ்வில் போது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலு சஞ்சிகையின் விற்பனை நடவடிக்கைகளினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமைக்காக திரு.செ.சசிராஜ் அவர்களும், இயற்புலமையாளர் எனும் பட்டம் வழங்கி திரு.மா.மகேந்திரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கருவி அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், சமூகசேவை ஆர்வலர்கள் என 300 பேர் வரை கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மதிய போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2019
Previous Post சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2019
ஆண்டுவிழா-2019
Next Post ஆண்டுவிழா-2019