வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 25 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும் ஏனைய அங்கத்தவர்களுக்கு சூழற்சி முறையிலும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இத்திட்டத்தினூடாக 898 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வுலர்உணவுப் பொதிகளினை வழங்க நிதி மற்றும் பொருள்உதவிகளை வழங்கய நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
உலர் உணவுப் பொதி-2019


Previous Post
ஓவியக் கண்காட்சி-2019

Next Post
உலர் உணவுப் பொதி-2018